
தீ விபத்தில் வீடிழந்த தம்பதியினருக்கு அரசு மருத்துவர் ஒருவர், தனது சொந்தப் பணத்தில் வீடு கட்டிக் கொடுத்ததால், பொதுமக்கள் பலரும் மருத்துவரைப் பாராட்டினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே செங்கமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன்- கமலம் தம்பதியினர். இருவரும் கூலித் தொழிலாளர்கள். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவர்களது கூரை வீடு தீயில் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த நகை, பணம், பத்திரங்கள், படிப்புச் சான்றிதழ், பாத்திரங்கள் அனைத்தும் சேதமடைந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

