
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்ல பாஜகவினர் யார், அவர்கள் சொல்வதற்கு தார்மீக உரிமை இல்லை, சொல்லவும் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ''பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக தோல்வியைத் தழுவியது'' என்று பேசினார். இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

