
தஞ்சாவூர் மாநகரில் தொடர்ந்து 457 நாட்களாக தினமும் 600 பேருக்குத் தன்னார்வ அமைப்பு ஒன்று இலவசமாக மதிய உணவு வழங்கி வருகிறது. கரோனாவால் தொடங்கப்பட்ட இந்த அமுதசுரபி அன்னதான திட்டம் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
கரோனா ஊரடங்கு தொடங்கியபோது, வெளி மாநிலங்களில் இருந்து தஞ்சாவூரில் தங்கி வேலை பார்த்தவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டபோது, அவர்களுக்கு தஞ்சாவூர் மாதாக்கோட்டையில் உள்ள 'மதர் தெரசா பவுண்டேசன்' என்ற தன்னார்வ அமைப்பு உணவு வழங்கத் தொடங்கியது. தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சாலையோரம் வசிப்பவர்கள், ஆதரவற்ற முதியோர்களுக்கு என தினமும் 600 பேருக்கு மதிய உணவைத் தொடர்ந்து 457 நாட்களாக இன்று (8-ம் தேதி) வரை வழங்கி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

