சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடங்களை நிதிச்சுமையை காரணம் காட்டி குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு அரசு தலைமை வழக்கறிஞர், ஒரு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஒரு தலைமை உரிமையியல் வழக்கறிஞர், 12 கூடுதல் அட்வகேட் ஜெனரல், 33 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 55 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், 102 அரசு வழக்கறிஞர்கள், 15 கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர்கள் என 221 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன. இதில் தலைமை அரசு வழக்கறிஞராக சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இது தவிர சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 46 தற்காலிக அரசு வழக்கறிஞர்களும், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 21 தற்காலிக அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்