திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையை தாண்டி உபரி ஆக்சிஜன் கையிருப்பு வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ), யங் இந்தியன்ஸ் (ஒய்ஐ) ஆகியவை சார்பில், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி நிலையம் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் (செய்தித் துறை), கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை) ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்