கோவை மாவட்டத்தில் தற்போதைய சூழலில், கரோனா தடுப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என, புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியராக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதிமுதல் எஸ்.நாகராஜன் பணியாற்றி வந்தார். இவர் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவை சிறப்பான முறையில், எந்த வித சர்ச்சைகளும் இல்லாமல் நடத்த கோவை மாவட்ட ஆட்சியராக தேர்தல் ஆணையத்தால் நேரடியாக நியமிக்கப்பட்டார். அதன்படி,மாவட்டத்தின் 181-வது ஆட்சியராக பொறுப்பேற்ற எஸ்.நாகராஜன், சட்டப்பேரவைத் தேர்தலை எந்த வித சர்ச்சையும் இல்லாமல் சிறப்பாக நடத்தி முடித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்