
சென்னை: மதுரை மாநகரில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: "முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15.12.2021) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் மதுரை மாநகர், கூடல்புதூரில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டிடத்தைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

