
தமிழகத்தில் மின்கம்பங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ விருதுநகரில் புதிதாக நடப்பட்ட மின்சார கம்பம் அடியோடு முறிந்து விழுந்ததில் அதில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி காளிராஜ் உயிரிழந்திருப்பதும், இன்னொருவர் காயமடைந்ததும் வேதனையளிக்கிறது. காளிராஜ் குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக நடப்பட்ட மின்சார கம்பம் உடனே முறிந்து விழுவது எளிதில் கடந்து போகும் விஷயமல்ல.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

