
கர்நாடகாவில் ஒமைக்ரான் பரவலையடுத்து புதுச்சேரியில் அதிநவீன ஆய்வகத்துடன் தனிப்பிரிவு, அரசு மார்பக நோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்குத் தடுப்பூசி சான்று கட்டாயமாகவுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா பரவத் தொடங்கியது. கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் இன்று வரை ஊரடங்கு நீடித்து வருகிறது. கடந்த 20 மாதத்தில் கரோனா படிப்படியாகக் குறைந்துள்ளது. தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகரித்ததால் மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து மீண்டும் புதுவையில் வழக்கமான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

