
குமரியில் நாற்றம் அடிப்பதாகக் கூறி மீனவப் பெண்ணைப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவத்தைப் போல், நரிக்குறவர் குடும்பத்தை இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர், ஓட்டுநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சமீபத்தில் தலைச்சுமையாக மீன் விற்கும் வாணியக்குடியைச் சேர்ந்த செல்வமேரி என்ற மூதாட்டியை மீன் நாற்றம் அடிப்பதாகக் கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட நடத்துநர் உட்பட 3 பேரைப் பணியிடை நீக்கம் செய்து குமரி போக்குவரத்துத் துறை நடவடிக்கை மேற்கொண்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

