
தமிழகத்தில் முதல் முறையாக, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னைப்பட்டியில் உள்ள கொன்னைக் கண்மாயில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய வணிகக் குழுவினரின் 10 நினைவுத் தூண்களுடன் கூடிய கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், நிறுவனர், தொல்லியல் ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன் தலைமையில் எம்.ராஜாங்கம், பீர்முகமது, ச.கஸ்தூரி ரங்கன், ஆ.கமலம் ஆகிய உறுப்பினர்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வுப் பணியின்போது இதைக் கண்டெடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

