
வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள 14,138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவாக 3.6 மி.மீட்டர் பதிவாகியுள்ளதாகவும் இதில் 2 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள நிலை அறிக்கையில், வடகிழக்குப் பருவமழையில் கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவின் மாவட்ட வாரியான அளவீடுகளும் அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்ட விவரங்களும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ முகாம்கள், நிவாரண முகாம்கள் நடத்தப்பட்ட விவரத்தையும் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகைமை சார்பில் புள்ளிவிவரங்களோடு அளித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

