
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு அளித்த்துள்ளார்.
அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அலுவலகத்துக்கு வெளியே நேற்று முதல் மோதல் ஏற்பட்டு வருகிறது. இன்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் அவரைத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

