
முப்படைத் தலைமைத் தளபதி விபத்தில் மரணமடைந்ததை அடுத்து ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணங்களை ஆராய தடயவியல் குழு குன்னூர் வருகை தந்துள்ளது.
நீலகிரியின் குன்னூர் மலைப்பகுதியில் இந்திய விமானப்படையின் எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக நேற்று விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இந்திய முப்படையின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

