
தகுதியுடைய அனைவருக்கும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்கப்படும் எனப் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வசதி படைத்த பலரும் சிவப்பு ரேஷன் அட்டை பெற்றுள்ளதோடு, ஏழ்மை நிலையில் உள்ள பலருக்கும் மஞ்சள் நிற ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏழ்மை நிலையில் உள்ள ஏராளமானோர் அரசின் உதவிகளைப் பெற முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும் பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

