
தமிழகத்தில் பிறக்க வேண்டும் என நினைத்திருந்தேன் என சென்னை உயர் நீதிமன்றப் புதிய பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்பு விழாவில் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றப் புதிய பொறுப்புத் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

