
கோவையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பாதிக்கப்பட்ட நடத்துநர் மற்றும் அவரது மகனுக்குத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.12.32 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் ஆலப்பாளையத்தைச் சேர்ந்த தந்தை சம்பத்குமார், அவர்து 11 வயது மகன் கிருத்திக் இருவர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

