
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகக் கொட்டித் தீர்த்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. வாணியம்பாடியில் உழவர் சந்தையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 2 வியாபாரிகள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. கனமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்குக் கடந்த ஒரு வாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளது. விடாமல் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

