
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த கனமழையும் பெய்தது. இதனால் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி, பண்ருட்டி, விருத்தாச்சலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. இந்த மழையால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. சுமார் 2 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

