
தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கனமழை நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகள் மருத்துவ உதவிகள் வழங்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழையினால் சேதமடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணிகள், விளைநிலங்களில் தேங்கியுள்ள நீரை வடியச் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான அனைத்துப் பணிகளிலும் தமிழக அரசு முழுவீச்சில் கவனம் செலுத்திப் பணியாற்றி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

