
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து தீவுகள் போன்று மாறியுள்ளன. மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் இருளில் பரிதவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 12 ஆம் தேதி மாலையில் இருந்து பெய்த அதிகனமழையால் தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் தேங்கி வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தன. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் புயல், மற்றும் காற்று இல்லாததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. அதே நேரம் வெள்ள பாதிப்புகள் அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

