
மழை பாதிப்பின்போது ஆய்வு செய்ய வராததால் மத்தியக் குழு முன்பாக புதுச்சேரி வேளாண்துறை இயக்குநர் பாலகாந்தியை விவசாயிகள் விரட்டினர்.
புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்புகளை மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். மத்திய உள்துறை இணைச் செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவானது, முதலில் புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பு மற்றும் வீடுகள் சேதத்தைப் பார்வையிட்டது. குழுவிடம் மீனவர்கள், தொடர் கடல் அரிப்பால் தூண்டில் முள்வளைவு தேவை என்று கோரினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

