
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை வெள்ளம் 200 கிராமங்களைச் சூழ்ந்தது. 120க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.
மாவட்டம் முழுவதும் 4 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றிலிருந்து மழை தீவிரமடைந்தது. இதனால் தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் குளம்போல் தேங்கியது. கன்னியாகுமரி முதல் நாகர்கோவில், நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆறுகள் செல்லும் பாலம் பகுதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

