
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 மருத்துவ முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை உள்பட டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காகப் பல இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

