
நூல் விலை உயர்வைக் குறைக்கக்கோரி நாளை திருப்பூரில் நடைபெறும் போராட்டத்துக்கு இந்தியக் கம்யூ. கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைத் தொழில்களும், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட துணி நூல் துறைத் தொழில்கள் அனைத்தும் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளன. நூல் விலை உயர்வைக் குறைக்கக்கோரி திருப்பூர் மாவட்டம் முழுவதும் நாளை (26.11.2021) முழு அடைப்புப் போராட்டத்துக்கு அனைத்துத் தொழில்துறையினரும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். இதற்கு இந்தியக் கம்யூ. கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

