
செம்பரக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு தற்போது 500 கனஅடியிலிருந்து மேலும் 500 அடி உயர்த்தி 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பபட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூவர் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு நீராதாரங்களாக உள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிப்பகுதிகளிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் நீர் நிரம்பி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

