
ராமநாதபுரம் மீனவர் கிராமத்தில் மீனவர் நிவாரண தொகையில் கடன் பிடித்தம் செய்து வந்த வங்கிகள் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தலையீடு காரணமாக நிறுத்தி வைத்துள்ளன.
தமிழ் நாடு அரசு சமீபத்தில் மீனவர்களுக்கு வழங்கிய மழைக்கால நிவாரணம் வழங்கியது. நிவாரணம் வழங்கப்பட்ட தொகைக்காக கல்விக் கடன், நகைக் கடன் பிடித்தங்கள் வங்கி கிளைகளில் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. மீனவர்களின் இந்த புகார்களை அடுத்து சு.வெங்கடேசன் எம். பி வங்கி அதிகாரிகளிடம் பேசியதில் அத்தகைய பிடித்தம் செய்யப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

