
கனமழையால் நிரம்பிய செல்லிப்பட்டு படுகை அணையில் குளிக்க அனுமதி மறுத்து, வழிகளில் முற்களைப் போட்டு போலீஸார் அடைத்தனர். இதனால் உள்ளுர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. புதுச்சேரியின் பெரிய ஏரியான ஊசுட்டேரி, இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

