
வடகிழக்குப் பருவமழையால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 43 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 572 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.17) காலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

