
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 4,000 கரோனா தடுப்பு உபகரணங்களை டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர், கொரிய தூதர் ஆகியோர் இணைந்து வழங்கினர். இவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் வழங்கப்பட்டன.
கொரிய நாட்டின் தேசிய நிறுவன தினம் [Korean National Foundation Day] கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, தென்னிந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களிலும் கோவிட் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்கு இன்கோ மையத்துடன் (InKo Centre) இணைந்து வேணு ஸ்ரீனிவாசன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

