
ஓய்வுபெற்ற பிறகும் விடுப்பு ஊதியம் பெறமுடியாமல் தவித்த ஊழியருக்கு வட்டியோடு சேர்த்து வழங்க போக்குவரத்துக் கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை அரசு போக்குவரத்து கழக ஊழியர் என்.ஆர்.சுரேஷ்பாபு ஓய்வுபெற்று நீண்டகாலமாக நிலுவைத் தொகைகள் பெறுவதற்காக தொடர்ந்து போராடி வந்துள்ளார். அவருக்கு உடனடியாக வட்டியோடு அவருக்கு சேரவேண்டிய பாக்கித் தொகைகளை வழங்குமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

