
வீடூர் அணை எந்நேரத்திலும் திறந்துவிடப்படும் என்பதால் சங்கராபரணி ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு வில்லியனூர் வருவாய்த் துறையினர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்கள் தண்டோரா போட்டும், ஒலிபெருக்கி மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை கனமழையால் நிரம்பி வருகிறது. அதன் முழுக் கொள்ளளவான 32 அடியில், நேற்றைய நிலவரப்படி 30 அடி வரை நிரம்பியுள்ளது. இது விரைவில் முழுக் கொள்ளளவையும் எட்டும் பட்சத்தில் அணை எந்நேரத்திலும் திறந்துவிடப்படும் நிலை உள்ளது. அவ்வாறு திறந்துவிடப்படும் நீர் சங்கராபரணி ஆற்றில் புதுச்சேரி மாநில எல்லையான மணலிப்பட்டை வந்தடைந்து செட்டிப்பட்டு, சுத்துக்கேணி, கைக்கிளைப் பட்டு வழியாக ஊசுட்டேரியின் ஒரு பகுதிக்குச் செல்லும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

