
ஆரல்வாய்மொழி அருகே வாலிபர் மரண சம்பவத்தில், காதல் பிரச்சினையில் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஆணவக்கொலை செய்ததாக குற்றம்சாட்டி 2வது நாளாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். அதே நேரம் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை அடுத்துள்ள தோவாளைபுதூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(27). இவர் அழகியபாண்டியபுரம் அருகே காட்டுப்புதூரை சேர்ந்த பெண் ஒருவரை கல்லூரி படிக்கும்போதிலிருந்து 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

