
தமிழகத்திலேயே முதல் முறையாக, கரூர் மாவட்டத்தில் கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்குத் தங்கத் தந்தை விருது, ரூ.5,000 ஊக்கத்தொகை அல்லது அரசுத் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். நிகழ்வைத் தொடங்கிவைத்து தங்கத் தந்தை விருதையும் வழங்கினார்.
தமிழகத்திலேயே முன்மாதிரித் திட்டமாக கரூர் மாவட்டத்தில் கருத்தடை செய்துகொள்ள முன்வரும் ஆண்களை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்கத் தந்தை திட்டத் தொடக்க விழா இன்று (நவ.20-ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் திட்டத்தைத் தொடங்கிவைத்து கருத்தடை செய்துகொண்ட ஆண் ஒருவருக்கு தங்கத் தந்தை விருதை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

