
ஐஏஎஸ் அதிகாரிகள் மழை பாதிப்பை பார்வையிடவில்லை, மக்கள் நலப்பணிகள் முடங்கியுள்ளதாக தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலர் அஸ்வினிகுமாரை சந்தித்து பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் பத்து பேர் கூட்டாக புகார் தெரிவித்தனர். இதில் திமுக பங்கேற்கவில்லை.
புதுவையில் 15 நாட்களுக்கும் மேலாக பெய்த தொடர்மழையால் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வீடுகள், சாலைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அரசு சார்பில் இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் மழை வெள்ளத்தால் ரூ.20 கோடிக்குள் மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணக்கிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கணக்கெடுப்பையும் மத்தியக் குழுவிடம் அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

