
கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மாணவி படித்த பள்ளி ஆசிரியர் 5 நாட்கள் கழித்து திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மாமனார் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மாணவர்கள், ஆசிரியரைத் தவறாக நினைத்ததால் அவமானத்தில் அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. அவர் மீது எந்தத் தவறும், குற்றச்சாட்டும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அவர் எழுதிய உருக்கமான கடிதமும் சிக்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

