
புதுவையில் தொடர்ந்து கணினி, செல்போனில் விளையாடிய பொறியியல் பட்டதாரி அதீத மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதிக நேரம் தனிமையில் குழந்தைகளை மொபைல் கேம் விளையாட அனுமதிக்காதீர் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரி மங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் தீபக். வயது 22. சிவில் இன்ஜினீயர் பட்டதாரி. இவர் கடந்த ஆண்டு கரோனா காலத்துக்குப் பிறகு மிக அதிகமாக கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் விளையாடி வந்துள்ளார். அதன் பிறகு சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டு சீரானது. அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் அவருக்கெனத் தனியாக அறை இருந்தது. அந்த அறையில் கம்ப்யூட்டர், மொபைல் போன், கேம் விளையாடத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

