
கரோனா மற்றும் பருவமழை காரணமாக விழுப்புரத்தில் பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளுக்கு வந்த குழந்தைகளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இனிப்பு, பூங்கொத்துகளைக் கொடுத்து வரவேற்றனர்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒன்றரை ஆண்டுகள் பள்ளி மாணவர்கள் அவரவர்களின் வீடுகளில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாகக் கல்வி பயின்று வந்தனர். தடுப்பூசி மூலம் கரோனா பரவல் தாக்கம் குறைந்ததையடுத்து, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 9 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கின. பின்னர் தொற்றுப் பரவலின் நிலையை ஆய்வு செய்த தமிழக அரசு, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

