கரோனா தொற்று என்னும் மன அழுத்தத்தைப் போக்க, தீபாவளியை உற்சாகத்துடன் வரவேற்கப் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தில், மக்கள் ஆர்வமின்றி இருந்ததால், பண்டிகை களையிழந்து காணப்பட்டது. 2-வது அலையின் தாக்கம் காரணமாக, சில மாதங்களுக்கு முன்னர் வரை, மக்களிடம் கடும் அச்சம் நிலவி வந்தது. மேலும், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, அனைத்துத் தொழில்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. இதனால் பலர் வேலைவாய்ப்பை இழந்து, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்