
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து வெடித்த விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் படுகாயடைந்தனர்.
புதுச்சேரி வசந்தம் நகரில் வசித்து வருபவர் சுரேஷ். உழவர்கரை மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளராக உள்ளார். இவருக்குச் சொந்தமான 3 மாடி வீடு முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் முதல் குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது. வீட்டின் கீழ் தளம், முதல் தளம், இரண்டாம் என 3 தளத்திலும் தலா 4 குடியிருப்புகள் உள்ளன. வீட்டின் முன்புறம் சுரேஷ் பாஜக அலுவலகம் நடத்தி வருகிறார். அதே தளத்தில் சுரேஷின் உறவினரான எழிலரசி (42), அவரது மகள் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஸ்ரீநிதி (12) ஆகியோர் வசித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

