
பயிர்க் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள், நாளை என்பதால் இ-சேவை மைய வாயில்களில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.
இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கிப் பாதுகாக்கவும், வருவாயை நிலைப்படுத்தும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு 2021-ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

