
அரக்கோணம் அருகே மின்சார ரயில் மோதியதில் 2 கூலித்தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது விபத்தா? அல்லது கொலையா? எனக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் பார்த்தசாரதி (30). இவரது நண்பர் ரங்கன் மகன் சுகுமார் (26). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு 11.15 மணியளவில் அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில்வே மார்க்கத்தில் தக்கோலம் - திருமால்பூர் ரயில் நிலையம் இடையே சேர்ந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே பார்த்தசாரதியும், சுகுமாரும் சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயிலில் அடிபட்டு மயங்கிக் கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

