
நவ. 22-ம் தேதி வரும் மத்தியக் குழுவை நானும், முதல்வரும் சந்திக்க இருக்கிறோம் எனப் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஆரியபாளையம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (நவ. 20) சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பெரியவர்கள், சிறுவர்களுக்கு மதிய உணவு பரிமாறினார். தொடர்ந்து தானும் சிறுவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார். அவர்களுடைய படிப்பு, விளையாட்டுகள் குறித்துக் கலந்துரையாடினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

