
கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை குறைந்துள்ள நிலையில் கும்பப்பூ சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. 3500 ஹெக்டேர் வயல் பரப்பில் நாற்றங்கால் நடவுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 3000 ஹெக்டேரில் சாகுபடிப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
குமரி முழுவதும் கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவு வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு பெய்துள்ளது. மழையால் மலையோர கிராமச் சாலைகள், தடுப்பணைகள், இணைப்புப் பாலங்கள், பாசனக் கால்வாய் ஓரங்கள், சாலைகள் போன்றவை சேதமடைந்தன. மாவட்டம் முழுவதும் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டன. மழையின்போது சூறைக்காற்று இல்லாததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

