
இந்தியாவில் 4 லட்சம் சித்தா மற்றும் ஆயுர்வேத மூலிகைகளுக்கு மத்திய அரசு காப்புரிமையைப் பெற்றுள்ளதாக டாக்டர் கு.சிவராமன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை தமிழ்நாடு ஹோட்டலில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் மத்திய, மாநில அரசின் மூலம் பழங்குடியினர்களுக்கான மூலிகைத் தாவரப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் கு.சிவராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பழங்குடியின மக்களுக்கு மூலிகைச் செடிகளைக் கண்டறியும் பயிற்சிகளை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

