
உத்தரப் பிரதேச மாநிலத்தில் போராட்டத்தின்போது கொல்லப்பட்ட விவசாயிகள் 4 பேர் உட்பட 5 பேரின் அஸ்திக்கு திருச்சியில் இன்று விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் இந்த மாதத் தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கார் மோதிக் கொல்லப்பட்ட விவசாயிகள் 4 பேர், பத்திரிகையாளர் ஒருவர் என 5 பேரின் அஸ்தியை ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு முழுவதும் கொண்டுசென்று அஞ்சலி செலுத்தி, மத்திய பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

