
முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் நிறுவனங்களில் ஒன்றான இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மையம் விருதுநகரில் தொடங்கப்பட்டது.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் வருகை இம்மையத்தில் தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமை வகித்தார். இதயம் குழும நிறுவனர் முத்து, பயனீர் குழும இயக்குனர் மகேஸ்வரன், பென்டகன் குழும நிர்வாக இயக்குனர் ஜவகர், ஆர்.வி. பொறியியல் கல்லூரி தாளாளர் பிருந்தா ராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

