
காரைக்காலில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி சிறப்பங்காடியை, புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் இன்று (அக்.27) திறந்து வைத்தார்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில், அரசு சார் நிறுவனமான பாப்ஸ்கோ மூலம் தீபாவளி சிறப்பங்காடி திறக்கப்படுவது வழக்கம். இதில் மளிகைப் பொருட்கள், குறிப்பிட்ட துணி வகைகள், பட்டாசுகள் குறைந்த விலையில் விற்கப்படும். இது ஏழை, எளிய மக்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

