
திரைப்படங்களை விரும்பும்‌ அனைவருக்கும்‌ மகிழ்ச்‌சி அளிக்கும் பொன்னாள் இது என்று தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டு இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர் ரஜினி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. 2019-ம் ஆண்டிற்கான இந்த விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இன்று டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த விருதினை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

