
கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசியைத் தகுதியுள்ள அனைவருக்கும் செலுத்தும் வகையில், தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் கடந்த வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதுவரை 5 கட்ட முகாம்கள் நடைபெற்றுள்ள நிலையில், 6-ம் கட்ட முகாம், இன்று (அக். 23) சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னையில் 1,200-க்கும் மேற்பட்ட மையங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

